செல்போன்களை நொறுக்கிய பள்ளி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

செல்போன்களை நொறுக்கிய பள்ளி

இச்சம்பவம் நடந்தது தென் ஆப்பிரிக்காவில். அங்கு பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டது. 














மாணவர்கள் ஆசிரியர்களுக்குத் தெரியாமல், தங்களது புத்தகப் பைகளுக்குள் ஒளித்துவைத்து செல்போன்களைப் பயன்படுத்தி வந்தனர். நோட்டீஸ் போர்டில் எழுதி ஒட்டியும் மாணவர்கள் மதிப்பதாக இல்லை. கடந்த வாரம் காப்பன் பகுதியில் உள்ள ஒரு பள்ளி நிர்வாகம், செல்போன்களை பள்ளிக்குக் கொண்டுவந்த மாணவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்து, பள்ளியின் காவலர் கையில் சுத்தியல் கொடுத்து, நொறுக்கச் செய்தது. இச்சம்பவத்தை, பள்ளி மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். கண்டனங்கள் வரும் எனக்கருதி அவர் வெளியிட்ட அவ்வீடியோ, வைரலாகி, அப்பள்ளிக்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

No comments:

Post a Comment

Please Comment