அரசு செவிலியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் வெள்ளிக்கிழமை (ஜன.11) நடைபெறவுள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெறும் இந்த கலந்தாய்வில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் அமைந்திருக்கும் அரசு பல்நோக்கு மருத்துவமனைகளுக்காக தலா 160 செவிலியப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன.
அவற்றை நிரப்பும் நோக்கில் இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வரும் செவிலியர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டுமானால், தற்போது எந்த மருத்துவமனையில் செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்களோ அங்கு குறைந்தது ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதலுடன் கொண்டு வருவது அவசியம்.
அந்தச் சான்று இல்லாதவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment