2 கைகளை இழந்தும் அழகாக எழுதும் சிறுவன் : தன்னம்பிக்கைக்கு குவியும் பாராட்டு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2 கைகளை இழந்தும் அழகாக எழுதும் சிறுவன் : தன்னம்பிக்கைக்கு குவியும் பாராட்டு

வேதாரண்யம் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 2 கைகளை இழந்தும் அழகாக எழுதும் மாற்றுத்திறனாளி சிறுவனை ஆசிரியர்கள் பாராட்டினர். 








நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட நல்லத்தன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ். இவரது மகன் துர்கேஸ்வரன் (7). இவர் 2 கைகளும் ஊனமடைந்த நிலையில் மாற்றுத்திறனாளியாக பிறந்தார். வடமழை ரஸ்தா ஊராட்சி தொடக்கப்பள்ளியில் துர்கேஸ்வரன் தற்போது 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியில் சேர்ந்து நன்றாக படிப்பதுடன் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி போன்றவற்றை தனது ஊனமடைந்த கைகளால் அழகாக எழுதி வருகிறார். 



ஊனம் எதற்கும் தடையில்லை என்பதை இந்த சிறுவன் தனது அபார திறமையால் நிரூபித்து காட்டி வருகிறான். இந்த மாணவனின் விடாமுயற்சியை பார்த்து ஆசிரியர்கள் பாராட்டுவதுடன் உற்சாகப்படுத்தி வருகின்றனர். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment