மத்திய அரசுத் துறையில் பணிகள்: முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மத்திய அரசுத் துறையில் பணிகள்: முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகத்தில் (இஎஸ்ஐசி) செவிலியர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களில் சேர முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 





இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஎஸ்ஐசி நிறுவனத்தில் செவிலியர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு ஆன்-லைன் முறையில் நடைபெற உள்ளது. இதற்கான கல்வித்தகுதி பிளஸ்-2 மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் ஆகும். மேலும், முன்னாள் படைவீரர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் வயது வரம்பில் சலுகை உள்ளதால் தகுதியுடைய அனைத்து முன்னாள் படைவீரர்களும் w‌w‌w.‌e‌s‌i​c.‌n‌i​c.‌i‌n, ‌w‌w‌w.‌e‌s‌i​c‌h‌e‌n‌n​a‌i.‌o‌r‌g என்ற இணையதள முகவரியில் சென்று தகுதியான பதவிகளுக்கு 21-1-2019 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 





விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் அதன் விவரத்தை திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0462-2560440 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment