மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைனில் விடுபட்ட எண்ணுக்கு மாற்று பதிவெண் தர நடவடிக்கை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைனில் விடுபட்ட எண்ணுக்கு மாற்று பதிவெண் தர நடவடிக்கை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உத்தரவு

வேலூர்: ஆன்லைன் பிரச்னை உள்ள வேலைவாய்ப்பு பதிவு எண்ணுக்கு பதில் பிழைகளை களைந்து புதிய எண்களை வழங்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது. 




தமிழக அரசின் துறைகளில் காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புத்துறை மூலம் ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு வந்தாலும், தேர்வு மதிப்பெண்ணுடன், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ஆகியவையும் பணி நியமனத்துக்கு பரிசீலிக்கப்பட்டு இறுதி நியமன பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடிப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதும், தங்களது பதிவை தொடர்ந்து புதுப்பிப்பதும் முக்கியமான தேவையாக உள்ளது, இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு மாணவர்களும், பட்டதாரிகளும் நேரில் சென்று அலைவதையும், தேவையற்ற பிரச்னைகளையும் தவிர்ப்பதற்கு வேலைவாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன. 






இந்நிலையில் பதிவுகளை டிஜிட்டலுக்கு மாற்றியபோது, சில பதிவு எண்கள் விடுபட்டதாகவும், பிழையாக பதிவேற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அவ்வாறு பதிவு எண்கள் விடுப்பட்டவர்கள், பிழையாக பதிவெண் பதிவேற்றப்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது பதிவை புதுப்பிக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், விடுபட்ட, பிழையாக பதிவேற்றப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு எண்களை கணக்கெடுத்து, அவற்றை சரி செய்து ஆன்லைன் மூலம் பதிவேற்றும் வகையில் தவறுகளை களைந்து புதிய எண்களை வழங்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment