வனவர் பணிக்கு 18ல் சான்றிதழ் சரிபார்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வனவர் பணிக்கு 18ல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: தமிழக வன சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 300 வனவர் பணியிடங்களுக்கு, வரும், 18 முதல், 22 வரை, சென்னையில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.தமிழகத்தில், வன சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2018 டிசம்பர், 6 முதல், 9ம் தேதி வரை, &'ஆன்லைன்&' தேர்வுகள் நடந்தன. இட ஒதுக்கீடு, 

விளையாட்டு முன்னுரிமை அடிப்படையில், ஒரு பணிக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, 900 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஆளுமை திறன் தேர்வு, 18 முதல், 22ம் தேதி வரையும், உடற்தகுதி தேர்வு, 26ம் தேதியும், சென்னையில் நடக்கிறது.இதில், தேர்வு செய்யப்படுவோர், நேர்முகத் தேர்வில் பங்கேற்பர். அதன் பின், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வனவர் பணி நியமனம் வழங்கப்படும் என, வனத்துறை சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment