நுகர்பொருள் வாணிபக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நுகர்பொருள் வாணிபக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் பணிகளுக்காக தேவைப்படும் பட்டியல் எழுத்தர் மற்றும் உதவியாளர் - காவலர் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மண்டல மேலாளர் கி. குமரவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

 பட்டியல் எழுத்தர் பணியிடத்துக்கு கல்வித் தகுதி - பிஎஸ்ஸி அறிவியல், உதவியாளர் - காவலர் பணியிடத்துக்கு கல்வித் தகுதி - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி. இப்பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு எஸ்.சி - எஸ்.டி வகுப்பினருக்கு 35, பி.சி., எம்.பி.சி வகுப்பினருக்கு 32, பொதுப் பிரிவினருக்கு 30. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - பிப். 20. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி - மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கல்யாணராமன் முதல் வீதி, புதுக்கோட்டை

No comments:

Post a Comment

Please Comment