பெரியார் பல்கலை. சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெரியார் பல்கலை. சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

🔵பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட உள்ள சிறப்புத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார். 



🔵பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இளநிலை, முதுநிலை மாணாக்கர்களுக்கான சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப். 22 கடைசி தேதி என்றும், ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) மாணாக்கர்கள் விண்ணப்பிக்க பிப். 25 கடைசி தேதி எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 



🔵இந்நிலையில், மாணாக்கர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, மாணாக்கர்களின் நலன் கருதி, இச்சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 4-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. 


🔵மேலும், விண்ணப்பங்களை மாணவர்கள் பயின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


🔵விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மேற்கண்ட தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு துணை வேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment