தேசிய சைக்கிள் போட்டியில் தங்கம்: மாணவருக்கு அமோக வரவேற்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தேசிய சைக்கிள் போட்டியில் தங்கம்: மாணவருக்கு அமோக வரவேற்பு

அன்னுார்:தேசிய சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு, அன்னுார் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்

.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், அகில இந்திய சைக்கிள் கழகம் மற்றும் ராஜஸ்தான் மாநில சைக்கிள் கழகம் சார்பில், தேசிய அளவிலான சைக்கிள் போட்டி கடந்த 4ம் தேதி நடந்தது.
 இந்த போட்டியில், அன்னுார் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர் சஞ்சய் சரவணன், 500 மீட்டர் துார டைம் டிரையல் போட்டியில், 35 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

மேலும், இருவாரங்களுக்கு முன், மகாராஷ்டிர மாநிலம், புனேவில், பள்ளி விளையாட்டு தேசிய ஆணையம் நடத்திய சைக்கிள் போட்டியில், 500 மீட்டர் துார டைம் டிரையலில், இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும், 1,000 மீட்டர் டீம் ஸ்பிரின்ட் போட்டியில், மூன்றாம் இடம் பெற்று, வெண்கல பதக்கமும் வென்றார்.மூன்று பதக்கங்களை வென்ற பின், நேற்று அன்னுார் திரும்பிய அவருக்கு, சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பள்ளி அறங்காவலர் குமார், அல்லப்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் வெங்கிடுபதி, உடற்கல்வி ஆசிரியர் குருசாமி மற்றும் பெற்றோர், மாணவர்கள், வரவேற்பு அளித்தனர். சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment