'எமிஸ்' பதிவு செய்யாத பள்ளிகளுக்கு விரைந்து பணிமுடிக்க அறிவுரை
>
'எமிஸ்' இணையதளத்தில் பள்ளி விவரங்களை பதிவு செய்ய திண்டுக்கல் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றிய முழு தகவல்களை அறிய, இ.எம்.ஐ.எஸ்., (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) கொண்டு வரப்பட்டது. அதில் மாணவர்கள்,ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், சில பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பற்றிய விவரங்களை பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் விவரங்களை பதிவு செய்யாத பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
>
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பற்றிய விவரங்களை அடையாளம் காணும் வகையில் புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பயன்பாட்டாளர் பெயர், கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி விவரங்களை பதிவு செய்யலாம். இந்த பணிகளை மூன்று நாட்களுக்கு முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
'எமிஸ்' பதிவு செய்யாத பள்ளிகளுக்கு விரைந்து பணிமுடிக்க அறிவுரை

No comments:
Post a Comment
Please Comment