அஞ்சல் காப்பீட்டு திட்டம் பொதுமக்களும் பயன்பெறலாம் The postal insurance plan may also benefit the general public
அரசு ஊழியர்களுக்கு, காப்பீட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், அஞ்சல் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம், துவங்கியது.மத்திய அரசின் நேரடி நிர்வாக அஞ்சல் துறையால், 'அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்' செயல் பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே, சேவையளித்த இத்திட்டம், தற்போது, படித்த இளைஞர்களுக்கும், சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.இதற்கான முகாம், அஞ்சல் துறை சார்பில், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை கலெக்டர் அலுவலகத்தில், நேரடி முகவர்களை கொண்டு, மூன்று நாள் முகாம் நேற்று துவங்கியது.அரசு ஊழியர்கள், இளைஞர்கள், முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment