ஐடிஐ, பி.இ பட்டதாரிகளுக்கு மெட்ரோ ரயில் கழகத்தில் வேலை!
ஜெய்ப்பூர் மெட்ரோ கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 39 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 2020 ஜனவரி 23ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஜெய்ப்பூர் மெட்ரோ கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 39
பணி மற்றும் பணியிட விபரங்கள்
Station Controller/Train
Operator
Junior Engineer
Customer Relations Assistant
Maintainer
கல்வித் தகுதி : 12-ஆம் வகுப்பில் கணிதம் அல்லது இயற்பியல் பாடத்தை ஓர் பிரிவாகக் கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பிஇ முடித்தவர்கள் அல்லது ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.jmrcrecruitment.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:
Post a Comment
Please Comment