கேரளாவில் மணப்பெண்ணின் விருப்பப்படி 100 புத்தகம் பரிசாக கொடுத்து மணம் செய்த இளைஞர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கேரளாவில் மணப்பெண்ணின் விருப்பப்படி 100 புத்தகம் பரிசாக கொடுத்து மணம் செய்த இளைஞர்

கேரளாவில் மணப்பெண்ணின் விருப்பப்படி 100 புத்தகம் பரிசாக கொடுத்து மணம் செய்த இளைஞர் 

மணப்பெண் கேட்ட100 புத்தகங் களை திருமணப் பரிசாக கொடுத்து கேரள முஸ்லிம் இளைஞர் திரு மணம் செய்த செய்தி உலகம் முழு வதும் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் கொல்லம் பகு தியைச் சேர்ந்தவர் இஜாஸ் ஹக்கிம். இவர் பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பயணப்படுபவர், கதை சொல்லி, சமூகச் செயற்பாட்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். அண்மையில் அதே கொல்லம் பகுதியைச் சேர்ந்த அஜ்னா நசீம் என்ற பெண்ணை திருமணம் செய்தார் இஜாஸ். திருமணத்தின்போது மணமுடிக் கும் பெண்ணுக்கு மெஹர் (வர தட்சணை) கொடுப்பது முஸ்லிம் கள் திருமணத்தில் உள்ள நடை முறையாகும். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு திருமணம் நிச்சயமானது. இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி இவர்களுக்கு கொல் லம் பகுதியில் திருமணம் நடைபெற் றது. நிச்சயத்தின்போது, தான் கூறும் 100 புத்தகங்களை பரிசாகத் தர வேண்டும் என்று இஜாஸ் ஹக்கிமிடம், மணப்பெண் அஜ்னா நசீம் தெரிவித்திருந்தார். 


 இதையடுத்து அஜ்னா கேட்ட அனைத்து புத்தகங்களையும் தேடிப்பிடித்து வாங்கி திருமணத் தின்போது அஜ்னாவிடம் கொடுத்து அவரை கைப்பிடித்திருக்கிறார் இஜாஸ் ஹக்கிம். இந்தத் தகவலை பேஸ்புக் பக்கத்தில் இஜாஸ் ஹக்கிம் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுதான் தற்போது வைரலாகியுள்ளது. பக் கத்தில் மனைவிக்கு புத்தகங்கள் பரிசளிக்கும் படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து இஜாஸ் ஹக்கிம் கூறும்போது, “அஜ்னா என்னிடம் 80 புத்தகங்கள்தான் கேட்டார். 


நான் மேலும் 20 புத்தகங்களைச் சேர்த்து 100 புத்தகங்களாகக் கொடுத்தேன். இதில் பைபிள், குரான், பகவத் கீதை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்டவையும் அடங்கும். அவர் கேட்ட பரிசு எனக்கு பிடித் திருந்தது. அறிவைவிட மீறிய சக்தி எதுவும் கிடையாது. அஜ்னா ஒரு வித்தியாசமான, அறிவார்ந்த பெண். அவருக்கு எனது வாழ்த்துக் கள்” என்றார். 

Young man who gave a gift of 100 books to the bride of Kerala

The news of the marriage of Mr. Kerala Muslim youth with the gift of 100 books asked by the bride is spreading throughout the world. Ijaz Hakim hails from Kollam, Kerala. 

He is a frequent traveler, storyteller and social activist. Ijaz recently married a woman named Ajna Naseem from Kollam. Mehr (giving) to the bride and groom during the wedding is the practice of the Muslim wedding. They got engaged in October last year. The couple got married on December 29 in Kollam area. During the engagement, Ajna Naseem, the bride, told Ijaz Hakim that she should be rewarded with 100 books. 

Then Ijaz Hakim searched all the books Ajna had asked and handed him over to Ajna on the eve of the wedding. Ijaz Hakim posted this information on his Facebook page. This record is currently going viral. He also posted pictures of his wife giving away books to Buck. Ijaz Hakim said, “Ajna asked me for 80 books. I added 20 more books to 100 books. 

These include the Bible, the Koran, the Bhagavad Gita and the Constitution of India. I loved the gift he asked for. There is no power beyond knowledge. Ajna is a different, intelligent woman. My greetings to him. ”


No comments:

Post a Comment

Please Comment