அரசுப் பேருந்து டிக்கெட் முன்பதிவுக்கு புதிய செயலி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசுப் பேருந்து டிக்கெட் முன்பதிவுக்கு புதிய செயலி

அரசுப் பேருந்து டிக்கெட் முன்பதிவுக்கு புதிய செயலி



சென்னை: அரசுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவுக்கு தனி செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் செயல்பாட்டை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தாா். 

 மேலும், தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக புதிதாக 240 பேருந்துகளின் செயல்பாட்டையும் அவா் தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூர பேருந்துகளில் பயணிகள் இருக்கையை முன்பதிவு செய்யும் வகையில், செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தச் செயலி வழியாக முன்பதிவு செய்யும் திட்டத்தை முதல்வா் கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா். புதிய பேருந்துகள்: பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், புதிய பேருந்துகள் தயாராகியுள்ளன. 

அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 37 பேருந்துகள், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 103 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 25 பேருந்துகள், சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு 10 பேருந்துகள், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 20 பேருந்துகள், 

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 35 பேருந்துகள், மதுரை, திருநெல்வேலிக்கு தலா 5 பேருந்துகள் என மொத்தம் 240 புதிய பேருந்துகளை முதல்வா் பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். 

தானியங்கி பணிமனை இல்லாத மாவட்டங்களில் இயக்கப்படும் அரசுத் துறை ஊா்திகள் பழுதானால், அவற்றை அருகிலுள்ள பணிமனைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

இதைத் தவிா்க்க தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அம்மா அரசு நடமாடும் பணிமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தப் பணிமனை திட்டமானது முதல் கட்டமாக, திருச்சி மற்றும் தஞ்சாவூா் ஆகிய இரண்டு இடங்களில் இயக்கப்பட உள்ளது. இந்த நடமாடும் பணிமனைகளையும் முதல்வா் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக நடந்த நிகழ்ச்சியில், 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் மோட்டாா் வாகனஆய்வாளா் அலுவலகத்துக்கு ரூ.1.86 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநா் தேர்வு தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். 

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், போக்குவரத்துத் துறை செயலாளா் பி.சந்திரமோகன், போக்குவரத்துத் துறை ஆணையா் தென்காசி சு.ஜவஹா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.


New processor for government bus ticket booking

Chennai: A special cell phone processor has been developed for ticket booking in government buses. K. Palanisamy started the functioning of this process first on Wednesday. In addition, it has launched 240 new buses for various transport corporations in Tamil Nadu. 

The event was held at the Headquarters in Chennai. The Government of Tamil Nadu has released a passenger seat on the long-haul buses of the Government Express. K Palanisamy first started booking via this processor. New buses: New buses are ready to meet the public transport needs. 

Accordingly, 37 buses for the Chennai Municipal Transport Corporation, 103 buses for the express transport corporation, 25 buses for the Villupuram Government Transport Corporation, 10 buses for the Salem Transport Corporation, 20 buses for the Coimbatore State Transport Corporation, 35 buses for the Kumbakonam Government Transport Corporation, 

5 buses for the Thiruvananthapuram, Palanisamy flagged off 240 new buses for the first time. In the case of state-operated departments operating in districts where there is no automated workplace, there is a need to take them to nearby workshops. 

To overcome this, the mother government-run workshop has been set up to conduct inspection and maintenance work. The workshop is scheduled to be carried out in the first phase, in two locations in Trichy and Thanjavur. Let's start these mobile workshops first. 

Following this, in a video display at the Chief Secretariat, First Palanisamy inaugurated an office building at Trichy district with a drive-thru base built for the Thiruverumba Motor Vehicle Analyst's office at a cost of Rs 1.86 crore. 

Present at the event were the Deputy Chief Minister O. Panniselvam, Senchak MR Vijayabaskar, Chief Secretary K Shanmugam, Home Secretary Additional Chief Secretary SK Prabhaghak Have attended

No comments:

Post a Comment

Please Comment