10,12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு - மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுரை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10,12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு - மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுரை!

10,12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு - மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுரை!



10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சிபிஎஸ்இ தலைவர் அனிதா கார்வால் அறிவுரை வழங்கியுள்ளார். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 

12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 15 (இன்று) முதல் மார்ச் 30 ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 (இன்று)முதல் மார்ச் 20ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. 

இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் தலைவர் அனிதா கார்வால், மாணவர்களுக்கு அறிவுரைக் கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்வு தொடங்குவதற்கு முதல் நாள் மாணவர்கள் தேர்வு எழுதும் மையத்தினை அறிந்து கொள்ள வேண்டும். 

மாணவர்கள் பள்ளிச் சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் மட்டுமே தேர்வுக் கூடத்திற்குச் செல்ல வேண்டும். மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 9.45 மணி அல்லது கட்டாயம் 10 மணிக்கு முன்னர் செல்ல வேண்டும். 

10 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மாணவர்கள் எடுத்துச் செல்லும் பேனா, பென்சில், பள்ளி அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் வெளிப்படையாகத் தெரியும் வகையில் இருக்க வேண்டும். 

தேர்வு மையங்களுக்குள் செல்போன், பணப்பை உள்ளிட்டப் பொருட்களை கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு மையங்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி, விடைத்தாள் புத்தகத்தில் பதிவு எண்ணை எழுத வேண்டும். 

தேர்வின்போது முறைகேடான செயல்களில் ஈடுபடக்கூடாது. தேர்வு மையத்தில் ஒழுக்கத்தினை கடைப்பிடிப்பதன் அவசியத்தை மாணவர்களுக்கு பெற்றோர் உணர்த்த வேண்டும். தேர்வு நாட்களில் மாணவர்கள் சத்தான உணவு உட்கொள்வதையும், போதுமான ஓய்வு எடுப்பதையும் பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது


10th & 12th CBSE Elections - Advice for Students & Parents


CBSE President Anita Karwal has advised students and parents on the 10th and 12th general elections. General Elections for Students studying in the Central Secondary Education Board Curriculum will be held from 12th to 15th February (today) to 30th March and to 10th standard students from 15th February (today) to 20th March. In the meantime, Anita Karwal, Chairperson of the Central Secondary Education Board has written a letter of advice to the students. In the first day of the exam, students should know the exam writing center.

Students must go to the examination hall with school uniform and ID only. Students must go to the exam centers at 9.45am or before 10am. Students will not be admitted to the top choice center at 10 p.m. Pens, pencils and school ID cards should be clearly visible to students. You must not carry cell phone and wallet items within the selection centers.

The supervisors at the exam centers must follow the instructions and write the registration number in the answer sheet. Do not engage in abusive activities during the exam. Parents need to make students aware of the need for discipline in the selection center. Parents should ensure that students eat nutritious meals and take adequate rest during the exam. This is stated in the letter

No comments:

Post a Comment

Please Comment