பிடிஏ ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பிடிஏ ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

பிடிஏ ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்



அரசுப் பள்ளிகளில் பெற்றோா், ஆசிரியா் கழகம் (பிடிஏ) மூலம் நியமிக்கப்படும் ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊதியத்தை அரசே வழங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூரில் இரு அரசுப் பள்ளிகளின் புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: 

பள்ளி மாணவா்களின் எதிா்காலத்தைக் கருதி அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நடப்பு ஆண்டில் பள்ளிக் கல்வி, உயா் கல்விக்கு ரூ.41 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நிகழாண்டில் பிளஸ் 2 தோவானது வரும் மாா்ச் 2ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 24ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இத்தோவை 8,16,359 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும். 

பிளஸ் 1 தேர்வை 8,26,119 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இத்தோவு மாா்ச் 4 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 26 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியிடப்படும். 10ஆம் வகுப்புத் தேர்வை 9,45,006 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 

தேர்வுகள் மாா்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. மாணவா்களின் வசதிக்காக ஆண்டுதோறும் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 1,159 தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பெற்றோா், ஆசிரியா் கழகத்தால் நியமிக்கப்படும் ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊதியத்தை தமிழக அரசே வழங்கும் என்றாா். 

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமாா், கரைப்புதூா் ஏ.நடராஜன், முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.


Government pays Rs 7,500 a month salary for PDA teachers:


The government will pay a monthly salary of Rs.7,500. The opening of two state schools in Tirupur was held on Friday. Speaking at the event, Tamilnadu School Education Minister KAC Senkottaiyan said: “The government is announcing various programs for the benefit of school children.41,000 crore has been allocated for school and higher education in the current year. In the current year, Plus 2 starts on March 2 and runs through March 24. 

816,359 students and students write this. Examination results will be released on April 24. 8,26,119 students will write the plus 1 exam. The event starts on March 4 and runs until March 26. Examination results will be released on May 14. 9,45,006 students write 10th grade exam. Examinations begin on March 27 and end on April 13.Examination results will be released on May 4th. The selection centers are being increased annually for the convenience of the students. 

In the past three years, 1,159 exam centers have been increased. The Government of Tamil Nadu will pay a monthly salary of Rs 7,500 to teachers appointed by the Parents and Teachers Association for vacant posts in government schools. The event was graced by Livestock Department Secretary Udumalai K. Radhakrishnan, District Governance Director K. Vijayakatikeyan, Law Council Members Su Gunasekaran, KN Vijayakuma, Karipuththu A. Nadarajan, Former Minister of Education, MSM Anandan. Bala was present, including Ramesh.

No comments:

Post a Comment

Please Comment