பிளஸ் 2 இயற்பியலில் 1 மதிப்பெண் வினாக்கள் கடினம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பிளஸ் 2 இயற்பியலில் 1 மதிப்பெண் வினாக்கள் கடினம்

பிளஸ் 2 இயற்பியலில் 1 மதிப்பெண் வினாக்கள் கடினம் சென்டம் எடுப்போர் எண்ணிக்கை குறையும் 

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழு திய மாணவ, மாணவிகள் தெரிவித் தனர். இதன் காரணமாக, சென்டம் எடுப்போரின் எண்ணிக்கை குறையக் கூடும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

நேற்று இயற்பியல், பொருளாதாரம், கம்ப் யூட்டர் சயின்ஸ் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. இயற்பியல் தேர்வு குறித்து மாணவர்கள் கூறும்போது, "ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடின மாக இருந்தன. அனைத்துப் பாடத் தையும் நன்கு படித்திருந்தால் மட்டுமே ஒரு மதிப்பெண் பகுதியில் அனைத்து வினாக்களுக்கும் சரி யாக விடையளிக்க முடியும். 

பாடத் தின் உள்ளே இருந்து கேட்கப்பட் டிருந்தாலும் அவை மறைமுகமாக இருந்தன. நன்கு புரிந்து படித்த மாணவர்களால்தான் விடைய ளிக்க முடியும். பெரிய வினாக்கள் பகுதியில் நேரடியான வினாக் களும், மறைமுகமான வினாக் களும் கலந்து இடம்பெற்றிருந்தன" என்று தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் பகுதியில் வினாக்கள் கடினமாக கேட்கப்பட் டிருப்பதால் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாம். 

ஏற்கெனவே நடந்து முடிந்த கணிதத் தேர்வும் கடின மாக இருந்ததாகவே பெரும் பாலான மாணவ, மாணவிகள் தெரிவித்திருந்தனர். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களின் மதிப்பெண் கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. அந்த வகையில் கணித மும், இயற்பியலும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருது வதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட்ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Please Comment