கரோனா பரிசோதனை ‘கிட்’ கண்டுபிடித்த நிறைமாத கர்ப்பிணி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கரோனா பரிசோதனை ‘கிட்’ கண்டுபிடித்த நிறைமாத கர்ப்பிணி

பிரசவத்தில் சிக்கல் இருந்தாலும் இரவு பகலாக தீவிர ஆய்வு கரோனா பரிசோதனை ‘கிட்’ வெற்றி பெற்ற மறுநாள் மகளை பெற்றெடுத்தார் 



உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ளது கரோனா வைரஸ். மக்கள்தொகை அதிகம் உள்ள இந்தியாவில் இந்த வைரஸ் பரவினால் நிலைமை என்ன? சிந்தித்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. ஆனால், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க 21 நாள் முழு அடைப்பை பிரதமர் மோடி துணிச்சலாக அறிவித்தார். அதன்பலனாக, சமுதாய பரவல் என்ற 3-வது நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை. 


இதற்கிடையில், கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் எல்லாம் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக களமிறங்கிவிட்டன. அதே வேளையில் முதலில் கரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனை முறை பரவலாக வில்லை. இந்தியாவில் அரசு மருத்துவ மனையில் இலவசமாகப் பரி சோதனை செய்யப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனை களில் ரூ.4,500 வரை செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத் துடன், பரிசோதனை முடிவுகள் வெளிவர பல மணி நேரமாகும். இந்நிலையில், எளிதில் வைரஸ் பாதிப்பைக் கண்டறிய பரிசோதனை கருவிகள் கண்டுபிடிப்பதில் பல ஆய்வு நிறுவனங்களும் ஈடுபட் டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சேர்ந்த, ‘மைலேப் டிஸ்கவரி’ என்ற நிறுவனம், கரோனா வைரஸை குறைந்த செலவில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியைக் கண்டு பிடித்து வழங்கி உள்ளது. 

இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னால் நிறைமாத கர்ப்பிணியின் தீவிர உழைப்பு இருப்பது இப்போது இந்திய மக்களை மனம் நெகிழச் செய்துள்ளது. அந்தப் பெருமைக்குச் சொந்தக் காரர் மினால் தக்வே போஸ்லே. இவர் ஒரு வைரலாஜிஸ்ட். கடந்த 5 ஆண்டுகளாக வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியவுடன், பரி சோதனை கருவி கண்டுபிடிக்க மைலேப் டிஸ்கவரி நிறுவனம் ஒரு ஆய்வுக் குழுவை ஏற்படுத்தி உள்ளது. 

அந்தக் குழுவின் தலைவர்தான் மினால். ஆனால், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆறு வாரத்தில் சாதனை பரிசோதனை கருவி கண்டு பிடிக்க 3 அல்லது 4 மாதங்கள் ஆகும் என்று முதலில் கூறப்பட் டது. ஆனால், மினால் தலைமை யில் அவரது கடும் ஆய்வு மற்றும் வழிகாட்டுதலில் ஆய்வுக் குழுவினர் மும்முரமாக இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 


அதன் பலனாக 6 வாரங்களில் புதிய கருவியை இந்தியாவிலேயே முதன் முதலில் கண்டுபிடித்துவிட்டனர். அந்தக் கருவியை மைலேப் டிஸ்கவரி உடனடியாக கண்டு பிடித்து விநியோகிக்கத் தொடங்கி விட்டது. கருவிகள் தயாரித்து முடித்து கடந்த மார்ச் 18-ம் தேதி தேசிய வைரலாஜிஸ்ட் நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அதன்பிறகுதான் அவருக்கு பிரசவ வலியே வந்துள்ளது. அதுவரை அவரது சிந்தனை எல்லாம் கருவியைக் கண்டுபிடிப்பதிலேயே இருந்துள்ளது. 

மறுநாள் 19-ம் தேதி அவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து மினால் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பரிசோதனை கருவியைக் கண்டு பிடித்த பிறகு, 2 குழந்தைகளைப் பெற்றெடுத்த உணர்வு எனக்கு இருந்தது. பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க வேண்டும், குழந்தை பிறப்பு ஆகிய 2 விஷயங்களும் ஒரே நேரத்தில் நடந்தன. அந்த இரண்டிலும் சவால்கள் இல்லாமல் இல்லை. அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பிறந்தது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காப் பாற்ற வேண்டும். இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. 

அதற்கு இதுதான் சரியான நேரம். கடந்த 5 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றுகிறேன். இதுபோன்ற அவசரமான கால கட்டத்தில் வேலை செய்யாவிட்டால், என்ன பயன்? பிரசவத்தில் சிக்கல் பரிசோதனை கருவியைக் கண்டுபிடிக்கும் குழுவில் 10 பேர் இருந்தோம். என் பிரசவத்தில் சிக்கல்கள் இருந்தன. 

அதனால், அலுவலகத்துக்கு நேரில் செல்ல முடியவில்லை. எனினும், வீட்டில் இருந்தே எனது குழுவினரை வழிநடத்தினேன். அவர்களுடைய கடுமையான உழைப்பு, ஆதர வால்தான் இந்தக் கருவியைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தக் கருவியில் கரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களைத் துல்லிய மாகக் கண்டறிய முடியும். அது எங்கள் குழுவின் மிகப்பெரிய வெற்றி. 

இந்த நாட்டுக்கு எங்களால் உதவி செய்ய முடிந்தது என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு உணர்ச்சிப் பொங்க கூறினார் மினால். பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு குழுவின் மற்றொரு ஆய்வாளர் காந்த் படோல் கூறும்போது, ‘‘ஒரு புதிய மருந் தைக் கண்டுபிடிப்பதில் உள்ள நடைமுறைகளைப் போலவே, பரி சோதனை கருவியும் பலவிதமான தர சோதனைகளைத் தாண்டி வரவேண்டும். 

இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு மினால் தக்வே போஸ்லேவின் பங்கு மிகப் பெரி யது. இனிமேல் ஒரு வாரத்துக்கு எங்கள் நிறுவனம் ஒரு லட்சம் பரி சோதனை கருவிகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும்’’ என்றார். கரோனா வைரஸ் பாதிப்பை வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிய சுமார் 8 மணி நேரமாகும். ஆனால், போஸ்லே குழு கண்டுபிடித்துள்ள கருவி மூலம் 2.5 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்துவிடலாம். 

இந்தக் கருவி ரூ.1,200 ஆகும். ஒரு கருவியில் 100 பரிசோத னைகளை நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த் திய மினால் மற்றும் அவரது குழுவினரை, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, மற்றும் நடிகர் சோனி ரஸ்தான் உட்பட ஆயிரக்கணக்கான பிரபலங்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர். ட்விட்டரில் ஆனந்த் மகிந்திரா வெளியிட்ட பதிவில், ‘‘மிசஸ் போஸ்லே, நீங்கள் பரிசோதனை கருவி மற்றும் குழந்தையை மட்டும் பெற்றெடுக்கவில்லை.


இந்த நாட்டுக்கு நம்பிக்கை ஒளியையும பெற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக நாங்கள் எழுந்து நின்று உங்கள் சல்யூட் வைக்கிறோம்’’ என்று மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளார். - பிடிஐ


Despite giving birth, she gave birth to daughter the next day after successful study

Corona virus has caused the world to stagnate. What if the virus is spreading in the most populous India? It's scary to think about. But Prime Minister Modi bravely announced the 21-day-long blockade to keep the situation under control. As such, India has not yet reached the 3rd level of community diffusion.

 In the meantime, all nations around the world are actively trying to find a vaccine to control the corona virus. At the same time, the diagnostic method for detecting coronavirus infection is not widely available. In India, free medical check-up at Government Medical Center. But private hospitals have been reported to cost up to Rs 4,500.

In addition, it is several hours before the test results are revealed. In this case, many research companies are involved in finding experimental tools to easily detect the virus. Accordingly, Milep Discovery Exchange, a company from Pune, Maharashtra, India, for the first time in India, has launched a corona virus detection test.

Behind this discovery, the intensive work of the incompetent pregnant woman has now left the Indian people heartbroken. The car of that glory is Minal Thakwe Boseley. He is a virologist. He has been researching the virus for the past 5 years. With the coronavirus spreading in India, Milep Discovery has set up a research team to find a testing tool.

Minal is the chairman of the committee. But, she was pregnant. It is said that it takes 3 or 4 months to find the achievement test equipment in six weeks. However, the research team undertook a rigorous overnight research with the Minil leadership under his rigorous study and guidance.



As a result, the new device was first invented in India in 6 weeks. Milep Discovery was immediately spotted and began distributing the device. The equipment was finished and handed over to the National Virologist on March 18. Only then did he have a childbirth. Until then, his thinking was all about finding the instrument.

The next day, on the 19th, she gave birth to a baby girl. Minal told reporters: After finding the test equipment, I had the feeling of giving birth to 2 children. Two things happened at the same time that the test equipment was to be invented and the baby was born. Both of those are not without challenges. The baby was born with surgery. But people need to be protected from the corona virus. The idea that this country has something to do with it.

This is the right time for that. I have been working in this field for the past 5 years. If it does not work in such an emergency, what is the use? We had 10 people in the group who were diagnosed with the problem of childbirth. There were issues with my delivery.

So I couldn't go to the office. However, I led my team from home. It was their hard work and support that made this tool possible. This tool can detect coronavirus victims accurately. That was our team's biggest hit.

It is very heartening to think that we have been able to help this country. Minal said so. Another analyst at the Experimental Instrument Discovery Group, Ikant Pathol, says that just like procedures in finding a new drug, the test equipment must go through a variety of quality tests.

The role of Minal Thackeray Bhosle was huge in accomplishing this project. Our company now produces and distributes one million test kits per week. It takes about 8 hours to detect coronavirus infection by other tests. But, with the tool found by the Bosley team, the virus can be detected in 2.5 hours.

The tool is priced at Rs 1,200. It has been reported that up to 100 tests can be performed on one device. Thousands of celebrities, including the famous businessman Anand Mahindra and actor Sonny Rastan, have praised Minal and his team for the discovery. In an article posted by Anand Mahindra on Twitter, Mrs Bhosle said, you are not just giving birth to a test kit and baby.

 You have brought hope to this country. We stand up and put your salute on the mobile phone. - PDI


No comments:

Post a Comment

Please Comment