சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பள்ளிகளுக்கு அவகாசம்
சென்னை:
பள்ளிகளுக்கு, அடுத்த கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இணையதள இணைப்பு, வரும், 30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு கல்வி ஆண்டும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர்களை சேர்ப்பது, தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும். அதன்படி, ஜூனில் துவங்க உள்ள, 2021 - 22ம் கல்வி ஆண்டுக்கு, மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக, அங்கீகாரம் பெற, பள்ளிகளிடமிருந்து விண்ணப்பம் பெறும் பணி நடந்து வருகிறது.
ஆன்லைன் வழியில் மேற்கொள்ளப்படும் இந்த பணிக்கான, இணையதள இணைப்பு வரும், 30ம் தேதி வரை, பள்ளிகள் பயன்படுத்தும் வகையில், செயல்பாட்டில் இருக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment