ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை கோரிய ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க தடை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை கோரிய ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க தடை

ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை கோரிய ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க தடை  

மதுரை சிவகங்கை மாவட்டம் அல்லி நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் 30.4.2020-ல் ஓய்வுபெற வேண்டும். 

எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல் அரசாணை பிறப் பித்தது. இதனால் 31.5.2020-ல் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன் பெறுவர். என்னைப்போல் ஏப்ரல் 30-ல் ஓய்வுபெற்று பணி நீட்டிப்புப் பெற்றவர்களுக்குப் பலனில்லை. 

இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது. எனவே 31.5.2020-ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்புச் சலுகை வழங்க உத்தர விடவேண்டும். 

அதுவரை என்னை மே 31-ல் பணியில் இருந்து விடு விக்கத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது. இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜவஹர், விருதுநகர் முத்துராமலிங்கபுரம் சிவசங்கர், செம்பட்டி பார்வதி, திருப்பத்தூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். 

 இந்த மனுக்களை நீதிபதி ஜெ.நிஷாபானு நேற்று விசாரித் தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய் வூதிய விவரங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை. மனுதாரர் களின் ஓய்வு வரம்பு மார்ச், ஏப்ரல் மாதங்களாக இருப்பினும், தற்போது வரை பணியில் உள்ளனர். 

அப்படியிருக்கும்போது ஓய்வு வயது அதிகரிப்பு அரசாணை மனுதாரர்களுக்குப் பொருந்தாது என்பது ஏற்க முடியாது என்றார். அரசுத் தரப்பில், பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. 

 அப்போது குறுக்கிட்ட அஜ்மல்கான், ஜூன் மாதம் தொடங்க 2 நாள் மட்டுமே உள் ளது. இதனால் அதற்கு முன்பு மனுதாரர்களைப் பணியில் இருந்து விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றார். 

 இதையேற்று மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். அரசுத் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

Please Comment