தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை மத்திய அரசு செலுத்தும்- நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி:
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் செலுத்த வேண்டிய தொகையை மத்திய அரசே செலுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மார்ச், ஏப்ரல், மே 3 மாதங்களுக்கான தொழிலாளருக்கான பங்கை மத்திய அரசு செலுத்தியது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். தொழிலாளர் பங்குத் தொகையை அரசு செலுத்துவதால் 72 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். https://www.maalaimalar.com/news/topnews/2020/05/13172758/1511353/Nirmala-Sitharaman-says-Central-government-pays-workers.vpf
No comments:
Post a Comment
Please Comment