31-ந் தேதி நடக்க இருந்த
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு தள்ளிவைப்பு
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு, வருகிற 31-ந் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், அந்த தேர்வை தள்ளி வைக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நேற்று நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டது. தேதி முடிவு செய்யும்போது, விண்ணப்பதாரர்களுக்கு 30 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்படும்“ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment