பலவகையான பழங்களும் அதன் அற்புத பயன்களும்...!!
மாதுளை பழம் -
வாரம் 1 சாப்பிட்டு
வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.
நாரத்தம் பழம் -
நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம்
விலகும்.
முந்திரிப் பழம் -
கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத்
துலங்கும்.
தூதுளம் பழம் -
தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச
நோய் தணியும். கபம் விலகும்.
பலாப்பழம் -
பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு
சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு
உண்டாகும்.
இலந்தைப் பழம் -
பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர,
செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.
திராட்சை -
உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன்
சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.
பப்பாளிப் பழம்
-
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு
வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.
வாழைப்பழம் -
மூளையில்
செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம்.
செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப்
பன்மடங்கு பெருக்கும்.
வில்வப் பழம் -
பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும்.
வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.
அரசம் பழம் -
விந்தணுக்களின்
எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம்
பெறுகிறது.

No comments:
Post a Comment
Please Comment