பேருந்துப் பயணம் QR Code Scanning System
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் எம்டிசி பஸ்களில் சோதனை முறையில்
க்யூ.ஆர்.கோடு மூலம் பயணச்சீட்டுக்கான கட்டணம் செலுத்தும் முறை
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்துவதற்கு பயணி- நடத்துனர் என்ன செய்ய
வேண்டும் என்பது குறித்து எம்டிசி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து
எம்டிசி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்டெப்-1:
பயணி தான் செல்ல
வேண்டிய இடத்திற்கான பயண கட்டணம் குறித்து கேட்பார்.
ஸ்டெப்-2:
நடத்துனர்
கட்டணத்தைதெரிவிப்பார்.
ஸ்டெப்-3:
பயணி பணம் செலுத்தும்போது பஸ்சின் உட்புறம்
ஒட்டப்பட்டிருக்கும் ‘க்யூ.ஆர்.கோட்’டை ஸ்கேன் செய்து, நடத்துனர் தெரிவித்த
கட்டணத்தை செயலி மூலம் செலுத்துவார்.
ஸ்டெப்-4:
பணம் செலுத்தப்பட்டவுடன் பயணிக்கு
அவரது செயலி மூலம் பரிவர்த்தனைகான முகவரி, பணம், பஸ் எண், தேதி மற்றும் நேரம்
ஆகியவை தெரிவிக்கப்படும்.
ஸ்டெப்-5:
பயணி பணம் செலுத்தியவுடன், அவர் செலுத்திய
கட்டணம் நடத்துனர் இருக்கை அருகே பொருத்தப்பட்ட ஸ்பீக்கரில் தெரிவிக்கப்படும்.
பிறகு நடத்துனர் பயணி பணம் செலுத்திய விவரம் பயணியின் கைபேசியில் வரும் எஸ்எம்எஸ்சை
சரிபார்த்து பயணசீட்டு வழங்குவார்.
ஸ்டெப்-6:
மேலும் நடத்துனரிடம் உள்ள கைபேசியில்
வரும் எஸ்எம்எஸ்சை பார்த்து தான் வழங்கிய பயணச்சீட்டு சரிதானா என்பதை சரிபார்த்து கொள்வார்.
ஸ்டெப்-7:
நடத்துனர் அந்தந்த ஸ்டேஜ்க்கு உண்டான அனைத்து பயணசீட்டை
வழங்கிய பின்னர் வழக்கம்போல ‘டிஆர்’ல் பயணசீட்டு எண் குறிக்கும் போது, யூபிஐ செயலி
மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பயணசீட்டு விவரத்தை பட்டியலில் பூர்த்தி செய்வார்.
ஸ்டெப்-8:
ஒவ்வொரு ட்ரிப் முடிவின் போது க்யூ.ஆர்.கோடு செயலி மூலம் பயணசீட்டு
விற்கப்பட்ட கட்டண விவரத்தை நடத்துனர் ‘டிஆர்’ல் சமன் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment