ஐ.ஏ.எஸ்.,களுக்கு வீட்டு வாரியம் அழைப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஐ.ஏ.எஸ்.,களுக்கு வீட்டு வாரியம் அழைப்பு

வீடு பெற விரும்பும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நீதித்துறை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம்' என வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்காக, சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில், வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு திட்டத்தை 2011ல் துவங்கியது. இங்கு 1,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, அதிகாரிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப் பட்டன.இதையடுத்து தற்போது, 570 வீடுகள் கட்ட வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டுள்ளது. இதில், 1,877 சதுர அடி பரப்பளவுள்ள 59 வீடுகள்; 1,564 சதுர அடி பரப்பளவுள்ள 322 வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன. இந்த வீடுகளை பெற விரும்பும், நீதித்துறை அலுவலர்கள், ஐ.ஏ.எஸ்., மற்றும் அரசு அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் என, வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது.இன்று துவங்கி அக்., 23 வரை, இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பத்தின் விலை 525 ரூபாய். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 1 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment