சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டைன்
திருவண்ணாமலை: அடுத்த கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்பிற்கான பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு மாற்றியமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் பூமாட்டுகாலனி கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மாற்றியமைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment