குழந்தைகள் தினத்தன்று, துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு போட்டோவுடன் கூடிய வாழ்த்து அட்டையை பரிசளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினம், குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, நேருவின் பிறந்த நாளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு, வாழ்த்து அட்டை வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, 32, மாவட்டங்களில், தலா, 50 பள்ளிகள் வீதம், தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பப்படும். குழந்தைகளின் போட்டோ அட்டையில் இணைத்து வழங்கப்பட உள்ளது. தபால்துறையுடன் இணைந்து கல்வித்துறை இப்பணியை மேற்கொண்டுள்ளது.மேலும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்திய திரைப்பட நிறுவனம் இணைந்து, பள்ளி குழந்தைகளுக்காக பொழுதுபோக்கு, நீதி போதனை அடங்கிய விழிப்புணர்வு குறும்படங்களை தயாரித்துள்ளது.இவற்றை பெற ஆர்வமுள்ள ஆசிரியர்கள், 044 24981159 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களை பெறலாம், என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment