கேஒய்சி நடைமுறையை மாற்றிய மொபைல் நிறுவனங்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கேஒய்சி நடைமுறையை மாற்றிய மொபைல் நிறுவனங்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு மொபைல் நிறுவனங்களும் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை திரட்ட ஆதாருக்கு மாற்றான கேஒய்சி நடைமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளன.









ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மொபைல் சேவை நிறுவனங்கள் ஆதார் அடிப்படையில் கேஒய்சி நடைமுறைகளை பூர்த்தி செய்ய தடை விதித்தது. ஆதார் வந்ததில் இருந்து உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் எனப்படும் கேஒய்சி விதிமுறைகள் ஆதார் அடிப்படையிலேயே பூர்த்தி செய்யப்பட்டன. இதனால் போலி ஆவணங்கள் மூலம் வேறொருவர் பெயரில் இணைப்பு வாங்குவது தடுக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவால் இது முடியாமல் போனது. எனவே, ஆதாருக்கு மாற்றாக வேறொரு நடைமுறையை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நிறுவனங்கள் மாற்று நடைமுறைக்கு மாறிவருகின்றன.

No comments:

Post a Comment

Please Comment