அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள உத்தரவு: பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டும்.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தும் போது, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து மாணவர்களுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து ெகாள்ள வேண்டும். ெபாதுப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி, பிளஸ் 2 தேர்வுக்கான வழிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை கண்டிப்பாக நடத்த வேண்டும்.
செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் பிப்ரவரி 23ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் இணைய தளம் மூலம் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை 18ம் தேதி முதல் 23ம் தேதிவரை பதிவேற்றம் செய்ய வேண்டும். மதிப்பெண் பட்டியல்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் 26ம் தேதி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் ஒப்படைக்க வேண்டும்.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment