பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நாளை தொடங்குகிறது  12-ம் தேதி வரை நடைபெறும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நாளை தொடங்குகிறது  12-ம் தேதி வரை நடைபெறும்

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக் கான செய்முறை தேர்வுகள் நாளை தொடங்கி வரும் 12-ம் தேதி முடிகிறது. பள்ளிக்கல்வியில் சமச்சீர் பாடத் திட்டத்தின்கீழ் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளன. 





இதற்கிடையே பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 1 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. 





ஆனால், கடந்த 22-ம் தேதி முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும், திட்ட மிட்டப்படி செய்முறை தேர்வுகள் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் நாளை தொடங்குகிறது. தேர்வு தொடங்கும் முன்னரே அகமதிப்பீடுக்கான பட்டியலை தயாரிக்க மாணவர்களின் செய்முறை நோட்டுகளை யும் மதிப்பிட வேண்டும். செய் முறை தேர்வுக்கு வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். 





எந்த முறைகேடுக்கும் இடம் தரக்கூடாது. ஆசிரியர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு களை மாணவர்களின் அகமதிப் பீடில் காட்டக்கூடாது என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மாதிரி செய்முறை தேர்வுகளை நடத்தி முழுவீச்சில் தயாராகிவிட்டன. மறுபுறம் போராட்டம் முடிந்து பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் அரசுப் பள்ளி மாணவர்களை தயார் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment