வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சார்பில் நாளை சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சார்பில் நாளை சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 




இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வெள்ளிக்கிழமை (நாளை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த முகாம், கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதில், 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளோமா, கலை அறிவியல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். வயது 35-க் குள் இருக்க வேண்டும். இம்முகா மில் 10-க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங் களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளன. 




படித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் சிரமப்படும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை அன்று அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங் களிலும் நடத்தப்பட்டு வரும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் privatejobfair.chn@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு தகவல் தெரிவித்து துறையின் ஒப்புதல் பெற்று பங் கேற்கலாம். 





இதன்மூலம் தங்க ளுக்கு தேவைப்படும் பணியாளர் களை தேர்வுசெய்து கொள்ளலாம். இச்சேவைக்கு கட்டணம் ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment