அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை : மேளதாளத்துடன் எடுத்து வந்த மக்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை : மேளதாளத்துடன் எடுத்து வந்த மக்கள்

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணகெதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராம பொதுமக்கள் சார்பில் கல்விசீர் வழங்கும் விழா நடை பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சிலம்புசெல்வி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரஜினி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கஸ்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



 .பழூர் வட்டார கல்வி அலுவலர் கள் கலியபெருமாள், ராசாத்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊர் பொது மக்கள் சார்பில் ரூ30ஆயிரம் மதிப்பிளான டேபுல், சேர், பேன், சில்வர் குவளை உள்ளிட பள்ளிக்குதேவையான கல்வி சீர்வரிசை ஊரை சுற்றி மேளதாளங்கள் முழங்க எடுத்துவந்தனர். பள்ளியில் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் கல்வி சீர்வரிசை களை ஒப்படைத்தனர். ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment