மழலையர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நிறுத்திவைப்பு  தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு  - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மழலையர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நிறுத்திவைப்பு  தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு 

மழலையர் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர் கள் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்படுவதாக தொடக்கக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 





தமிழகத்தில் அரசு பள்ளி வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசரி கல்வி முறையில் மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக 2, 381 அங்கன்வாடிகளில் மழலை யர் வகுப்புகள் கடந்த ஜனவரி 21-ம் தேதி முதல் தொடங்கப்பட்டன. 




மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். பெரும்பாலான ஆசிரியர்கள் பணி மாறுதல் உத்தரவை மறுத்து விடுப்பில் சென்றனர். ஆனால், பணி மாறுதலை ஏற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர். 




இதையடுத்து அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆசிரியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மழலையர் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியரை நியமிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 





அதை ஏற்று மழலையர் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஏ.கருப்பசாமி சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment