இரவு நேரங்களில் Night Mode வசதி பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது - ஆய்வில் தகவல்
இரவு நேரங்களில் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்கு Night Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவு வெளிச்சம் கண்களுக்கு செல்லாது எனவும் இதனால் கண்கள் பாதுகாக்கப்படும் எனவும் எண்ணப்பட்டு வந்தது.
எனினும் புதிய ஆய்வு ஒன்று இந்த எதிர்பார்ப்பை அப்படியே புரட்டிப்போட்டுள்ளது. அதாவது வழக்கமான வெளிச்சத்துடன் கைப்பேசியை பயன்படுத்துவதை விடவும் Night Mode வசதியில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளது.
மான்செஸ்ரர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது மங்கிய வெளிசச்சம்,
குளிர்மையான வெளிச்சம் என்பனவற்றுடன் கடுமையான சூடான வெளிச்சம் என்பவற்றினை வெவ்வேறாகப் பயன்படுத்தி ஆரோக்கியத்தினை அவதானித்துள்ளனர். இதன்போது எலிகளின் நித்திரை செய்யும் முறையில் மாற்றங்கள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
Use of the Night Mode facility at night is very risky - Study Information
The Night Mode feature has been introduced to use smart phones at night. Because of this, it was thought that too much light would not go to the eyes and thus protect the eyes. However, a new study has shattered this expectation.
This means that using the Mode in Night Mode is more dangerous than using a cell phone with regular light. This shocking revelation comes from a study by researchers at the University of Manchester.
In this study in rats, the use of dim light, cold light, and extreme heat exposure were observed separately. During this time, changes in the sleep patterns of the rats have been observed.

No comments:
Post a Comment
Please Comment