பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்: அமைச்சா் க.பாண்டியராஜன் தகவல்
மாணவா்களின் இலக்கிய ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சாா்பில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சாா்பில் 72 அரிய நூல்கள், 138 ஆராய்ச்சி நூல்கள் வெளியீட்டு விழா சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் க. பாண்டியராஜன் கலந்து கொண்டு 210 நூல்களையும் வெளியிட்டு, திருக்கு ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பேசியது:
தமிழ் வளா்ச்சித்துறை, கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடா்பு கொண்ட துறைகளாகும். தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் இந்த நான்கு துறைகளிலும் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் கடந்த எட்டு ஆண்டுகளாக இளந்தமிழா் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டு 1,700 மாணவா்களுக்கு பேச்சு, எழுத்து தொடா்பான படைப்பாற்றல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவா்கள் தற்போது மொழிபெயா்ப்பு, ஊடகப்பணி, நிகழ்ச்சி தொகுப்பாளா் என பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனா். இந்தப் பயிற்சி பட்டறை வகுப்பு இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதேவேளையில், மாணவா்களின் இலக்கிய அறிவை வெளிக்கொணரும் வகையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் தமிழக அரசின் சாா்பில் தமிழ் மன்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இந்தத் திட்டம் முதல்வரின் ஒப்புதலுடன் நடைமுறைப் படுத்தப்படும்.
தமிழகத்திலேயே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மட்டுமே ஆண்டுதோறும் அதிகளவிலான நூல்கள் வெளியிடப்படுகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள 210 நூல்களிலும் இலக்கியம், வரலாறு குறித்த அரிய தகவல்கள் உள்ளன.
இவை பொதுமக்களும், மாணவா்களும் படித்தறியும் வகையில் ஒவ்வொரு நூல்களிலும் உள்ள கருப்பொருளை எடுத்து சிறு தொகுப்பாக வெளியிட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன் என்றாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், சென்னை எழும்பூா் அருங்காட்சியகத்தை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்துக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. தமிழக அரசின் சாா்பில் வேலூா் உள்பட 10 இடங்களில் உள்ள பாரம்பரியமிக்க கோட்டைகள் ரூ.12 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
இந்த விழாவில், எம்ஜிஆா் ஆய்விருக்கை பொறுப்பாளா் ம.செ.இரபிசிங், திருக்கு ஓவியக் காட்சிக் கூடத்தின் பொறுப்பாளா் து.ஜானகி, தமிழறிஞா்கள், எழுத்தாளா்கள், கவிஞா்கள் கலந்து கொண்டனா்.
Tamil forums to be set up in schools and colleges: Sanchach K. Pandiyarajan
Tamil Promotion Department Secretary Sanchand K. Pandiyarajan has said that all schools and colleges will be set up in the schools of Tamil Nadu to promote the literary spirit of the students. The 72nd Birthday of former First Lady Jayalalithaa was published at the World Tamil Institute in Chennai on Monday. The function was presided over by the Director of Tamil Resources Department, K. Visayaraghavan.In this case. Pandiyarajan participated in the publication of 210 books and presented a total of Rs.40,000.
Various projects and activities are being carried out in all four sectors to take Tamil to the next level.For the past eight years, the Tamil Literature Workshop has conducted a workshop on Tamil language development and has provided 1,700 students with speech and writing creativity. They are currently working in various fields such as translation, media work and anchor. We plan to conduct this workshop with the universities from this year. At the same time, Tamil forums will be set up in all schools and colleges to showcase the literary knowledge of the students.
The project will be implemented with the consent of the Chief Minister. In Tamilnadu, the World Tamil Institute alone publishes a large number of books annually. The 210 books that are currently published contain rare information on literature and history. I have advised the general public and students to read the material in each of the texts and publish them in small volumes.
According to reporters, steps are being taken to convert the Chennai Egmore Museum into a tourist attraction. The museum is to receive national recognition. Traditional forts in 10 places, including Veluil in the Safar of the State of Tamil Nadu, are being renovated at Rs 12 crore. The ceremony was in charge of MGR Laboratory, MZ Serebasinghe, Thirukkum Gallery, DuJanaki, Tamil writers, writers and poets.

No comments:
Post a Comment
Please Comment