வருங்கால வைப்பு நிதிக்கு 10% வட்டி வழங்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வருங்கால வைப்பு நிதிக்கு 10% வட்டி வழங்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

வருங்கால வைப்பு நிதிக்கு 10% வட்டி வழங்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 10 சதவீதமாக நிர்ண யிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அமைப்பு சார்ந்த ஊழியர்களின் முதலீடான வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி வீதம் 8.65 சதவீதத்தில் இருந்து, 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி வாரி யத்தின் இந்த முடிவால் 7 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். 


 பொருளாதார பின்னடைவு காரணமாக வட்டி வீதம் குறைந்து வருகிறது. அதனால் வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் வருமானம் குறைந்து வருவதால், அதை ஈடுகட்டும் வகையில் வட்டி குறைக்கப்படுவதாக வாரியம் கூறியிருப்பதை ஏற்க முடியாது. 1989-90 முதல் 2000-01 வரையிலான 12 ஆண்டுகளுக்கு வருங்கால வைப்பு நிதி மீது 12 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. அதன்பின் 20 ஆண்டுகளில் 3.50 சதவீதம் வட்டி குறைக்கப் பட்டுள்ளது. 

இது வருங்கால வைப்பு நிதியை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய பொருளாதார தாக்குதல் ஆகும். வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, அரசுக்கும் மிகவும் முக்கியமாகும். அரசின் பெரும்பான்மையான திட்டங்களுக்கு எல்ஐசி நிறு வனத்துக்கு அடுத்தபடியாக தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியம்தான் அதிக நிதியை கடனாக வழங்குகிறது. 

 வருங்கால வைப்பு நிதி முத லீட்டையும், அதன் மீது வழங்கப் படும் வட்டியையும் தொழிலாளர் களின் அடிப்படை வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெறும்போது குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்க்கை நடத்து வதை உறுதி செய்யும் வகையில் வருங்கால வைப்பு நிதிக்கு குறைந்தது 10% வட்டி நிர்ணயிக்க வேண்டும். 



கடன் சந்தை நிலவரம் சிறப்பாக இருந்து அதிக லாபம் கிடைக்கும்போது அதற்கு இணை யான வட்டியையும், இல்லா விட்டால் குறைந்தபட்ச வட்டியை யும் வாரியம் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் வருமானம் குறைந்து வருவதால், அதை ஈடுகட்டும் வகையில் வட்டி குறைக்கப்படுவதாக வாரியம் கூறியிருப்பதை ஏற்க முடியாது.

No comments:

Post a Comment

Please Comment