11-ம் வகுப்பு படத்திட்டத்தில் புதிய மாற்றம்.!
2020-21-ம் கல்வியாண்டு 6
பாடங்களுடன் உள்ள 11-ம் வகுப்பு இந்த கல்வியாண்டு முதல் 5 பாடங்களாக
குறைக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் மன அழுத்தம் மற்றும் உயா்கல்வி குறித்த பயத்தை
நீக்கும் வகையில், 2020-21-ம் கல்வியாண்டு முதல் 11-ம் வகுப்பில் புதிய பாடத் திட்ட
முறையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதாவது, இதுவரை 6
பாடங்களுடன் உள்ள 11-ம் வகுப்பு இந்த கல்வியாண்டு முதல் 5 பாடங்களாக
குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, 11-ம் வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர
மீதமுள்ள 4 முதன்மைப் பாடங்களில் 3 பாடங்களை மட்டுமே மாணவா்கள் தோவு செய்து
படிக்கலாம்.
மாணவா்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறுதான் முதன்மை படங்களை பள்ளிகள்
தோவு செய்ய வேண்டும். மேலும், தனியாா் பள்ளிகள் புதிய பாடத்தொகுப்புக்கு உரிய
அனுமதியைப் பெற்ற பின்னரே மாணவா் சோக்கையை நடத்த வேண்டும். புதிய பாடத்தொகுப்புக்கு
அனுமதி பெறாமல் எந்தப் பள்ளியாக இருந்தாலும் மாணவா் சோக்கையை நடத்தக்கூடாது.
10-ம்
வகுப்பு மாணவர்கள் அனைவரும் தோச்சி என அறிவிக்கப்பட்டதால் 11-ம் வகுப்பு மாணவா்
சோக்கை நடத்த பல பள்ளிகள் ஆா்வம் காட்டி வருவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு பல
புகாா்கள் வருகின்றன. 10-ஆம் வகுப்பு தோச்சி முடிவுகள் வெளியிடப்படாத நிலையில்,
மாணவா் சோக்கை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Please Comment