மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைப்பதை உறுதி செய்ய வேண்டும் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைப்பதை உறுதி செய்ய வேண்டும் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைப்பதை உறுதி செய்ய வேண்டும் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று சமீபத்தில் நீதிமன்ற வழக்கு ஒன்றில் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதற்கான நடவடிக்கை எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. 
 
தற்போது பெட்டிகள் வைக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
 
 * மாணவ-மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் குழுக்களை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும். 
 
 * அனைத்து மெட்ரிகுலேசன், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படுவதையும், பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் அனைத்து பெண் போலீஸ் நிலையத்தின் தொலைபேசி எண்கள் இடம்பெற்று இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். 
 
* பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாணவ-மாணவிகளின் குறைகளை பெறுவதற்கு மாதத்துக்கு ஒருமுறை மெட்ரிகுலேசன், மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய செல்ல அறிவுறுத்த வேண்டும். 
 
 கற்பிக்கும், கற்பித்தல் அல்லாத பணியாளர்கள், பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் அளிக்க வரும் மாணவ-மாணவிகளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Please Comment